Saturday, 26 December 2015

தேவதச்சன் கவிதைகள் -1




சிறுமி கூவுகிறாள்.
நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நில்லா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன அலையை போல சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

Thursday, 24 December 2015






பூப்படைந்த சிறுமியிடம்

ஒரு இறுக்கம்

வந்து குடியமர்கிறது ..!!

உடலின் எந்த ஒரு பாகத்திலும்

கண்களைப் பெறுகிறாள் .

மையவிழி மட்டுமன்றி

ஓரவிழிகளும் புலன் கொள்கின்றன .

எதிர்நோக்கும் பார்வைகளை

உய்த்தறிகிறாள் ..!!

அவற்றை

தரம் பிரிக்கவும்
கூடுகிறது ..!!

அவளுள் அம்மாற்றத்தை
அவளுள் குடிவரும் ஏதோ ஒரு தெய்வம்

செய்கிறது ..!!
அவளே பின்னர் மணமாகி
அன்னையாகி கனிகையில் ...
அத்தெய்வம் அவளை விட்டு

வெளியேறுகிறது ...!! முதல் குழந்தை
அவளை மாற்றுகிறது ..!! இப்போது
அவள் மீண்டும் சிறுமியாகிறாள் ..!!

Saturday, 19 December 2015

A Tribute to the Company


எங்கள் ஆலமரம்..!!

இங்கே பறவைகள் நாங்கள்
உண்டு களித்து விடை பெறுவதில்லை ...!!
நாங்கள் கிளைகளாய் , விழுதுகளாய் , ஆணி வேர்களாய்
பூக்களாய், ஆலங்கனிகளாய்
பரவ விழைகின்றோம் ..!!

இங்கே...எங்கள் ஆலமரத்தில்
கூடுகள் கட்டப்படுவதில்லை...! மரமே கூடாய் ...!!
எங்கள் மரத்திற்கு நீர் தேவையில்லை ..
எங்கள் இரத்தமே நீராய்..!!

நாங்கள் இங்கே பணியிலில்லை ...!!
வாழ்கிறோம் ..
பெரிய மரமே தன கூடென்று
வாழ்பவர்க்கு ..தனிக்கூடென்று ஒன்று
உண்டா என்ன ...??

கற்பித்தல் இல்லை இங்கு
ஆனாலும்..நாங்கள் இங்கே கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அதிகம் ...!!

இல்லறமும் ...பணி என்னும்
நல்லறமும் இனிதே இயைந்தது எங்களுக்கு ..!!

எங்கள் ஆலமரம்
ஒரு நிறுவனமோ..அலுவலகமோ அல்ல ...
இது ஒரு இயக்கம்..
ஆம்..!!
ஆயிரம் இதயங்களின் ஒட்டுமொத்த இயக்கம் ...!!
விரைவில் பேரியக்கம் ..!!
எட்டாண்டுகளில் எட்டாத உயரத்திற்கு
தழைத்தோங்கியிருக்கும்
எங்கள் இயக்கம் ... மேகங்களை முட்டித்தள்ளி
மேன்மேலும் கிளைத்தோங்கும் ...!!

அவனியெங்கும் கடல்கடந்து
எங்கள் விழுதுகள் பரவிச்செல்லும் ...!!
செல்லும் வழியெங்கும்
தடைகளை நிரவிச்செல்லும் ...!!

நாள்தோறும் எங்கள் சாதனைகளை
விரவிச் சொல்லும் ...!!

செல்பேசி




தொலை தூரப்பயணங்களில்
காற்றின் அலைவரிசையில்
அறுந்து போன
‎உன்னுடனான என்
செல்பேசி உரையாடல்கள்,
கனவின் அலைவரிசையில்
என்னைப்பின்தொடர்கின்றன...!!

A Tribute to our Chairman



கோடி மலர் முகங்கொண்ட
எங்கள்
குடும்பத்தலைவனுக்குப் பிறந்தநாள் இன்று..!!


வைரம் போல் நெஞ்சுரம் கொண்ட
எங்கள் வழிகாட்டி உதித்த பொன்னான நாள் இன்று ..!!

தொய்ந்த உன் குரலைக் கேட்டதில்லை
இதுவரை ..!!

சிம்மக்குரல் கர்ஜனை உன் மொழியேயன்றி
வேறில்லை...!!

அனுதினம் எங்களை செதுக்குகிறாய் ..
ஆணி வேராய் எங்களுள் நிலைக்கிறாய் ...!!

அலைபேசும் மொழிகள் யாவும்
உன் பேர் பாடி நிற்கும் ..!!

செல்பேசி என்றதும் உன்பேர்
உயர்ந்து நிற்கும் ...!!

எண்ணிலடங்கா தடைகள் பல
நீ கண்டதுண்டு ...
இனி ...
மண்ணிலடங்கா ..பேர் புகழ்
என்றும் உனக்குண்டு ..!!

உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட
தகவல் தொடர்புத் துறையில்

எங்களுக்கான ஜன்னல்களை திறந்து வைத்தாய் ...
மனித உழைப்பு நீராய் உறிஞ்சப்படும்
இவ்வுலகில்
மனித உறவுகளைக்கொண்டு புதியதோர்
உலகு படைக்கிறாய் ...!!

திரு.சுந்தரம் பெற்ற சுந்தரனுக்கு ,
அலைபேசி நுட்பம் நிறைந்த வித்தகனுக்கு ,
இனி வரும் காலம்...பார் புகழும் காலம்...!!

ஒரு தந்தையாய் , விந்தையிலும் விந்தையாய் ,
மூத்த சகோதரனாய் எங்களை வழிநடத்தும்

தலைவனை வாழ்த்துகிறோம்...!!
நீ வாழ வேண்டும் பல்லாண்டு ...!!

ஏனென்றால் உன் பிறந்த நாள் ...!!


ஏனென்றால் உன் பிறந்த நாள் ...!!

நீ உறங்கும்  நிமிடங்கள்
உன் அழகின் வசீகரத்தை
அதிகரிக்கும் ..!!
என்  தாயின் ஸ்பரிசங்கள்
உன்னின் ..
ஒவ்வொரு தொடுதல்களிலும்
உணர்கிறேன் ...!!
ஆலமாய்  என் உறவுகளைத்
தாங்குகிறாய் ...!! கடலின்
ஆழமாய் நம் காதலைப்
போற்றுகிறாய் ...!!
உன்னின் என்  மேலான காதல்
என்னினும் மேலானதாகவே
இருக்கிறது எப்போதும் ..!!
கைமாறென்று இதற்கு ஒன்று
தோன்ற வில்லை எனக்கு ...!!
என் ஏழு ஜென்ம காதலும்
உன்
காலடி  கீழேயே இருக்கும்..!!
என் விந்து சுமந்து , என் வம்சம்
வளர்த்தவள் நீ ..!!
என் உந்து விசையும் நீ ..!!

காதல் வாழ்க ..!!அதிலும்  நம் காதல்
வாழ்க  நூறாண்டு ...!!
- மாறாக்காதலுடன்  பிரதீப்.

மாமனுக்கு ஒரு சொல் ..!! A Tribute to my Uncle


செல் காலமும், திகழ் காலமும்
வருங்காலமும்,

வாழ்த்தித் துதியும்
வருணனை வாழ்த்துவோம் ..!!

மதவேழமாய் , மழைமேகமாய் , பருப்பொருளாய்

வாழும் கலையைப்
போற்றுவோம்...!!


கருநீலவண்ணனாய் , கார்முகில் மன்னனாய்
நானிலம் போற்றும் தூயவனை
வாழ்த்துவோம் ...!!

நீ கடந்து வந்த முட்பாதை
ஊரறியும் ..!!
நீ முற்றரியா குழந்தை என
சுற்றமறியும் ..!!


மருகனென எண்ணியதில்லை
மாமனென்றும் உனை நான் எண்ணியதில்லை ..!!


உன் தாழ் தனை பணிந்து சென்னி சூட
மைந்தர் பலருண்டு ..!!
உன் அன்பெனும் வாள் தனை வீழ்த்த
தரணியில் எவருண்டு ..!!
இரந்து வந்தவர்க்கு நீ ஈந்தது பல ..!!
அதன் பொருட்டு இழந்தது பல ..!!


கவலை வேண்டாம் ..கலங்க வேண்டாம் ..!!
ஆற்ற வேண்டிய பணிகள் பல ..!!
ஆற்றலுண்டு நூறாண்டு சில ...!!
முக்கண்ணனின் முகமுண்டு உனக்கு ..!!
முருகனின் அருளுண்டு உனக்கு ..!!
வாழ்க பல்லாண்டு சந்ததி பல கண்டு ..!!

செல்ல மகள் ..!!



எவன் சொன்னது பூக்களுக்கு
கை கால் இல்லையென்று...?
பள்ளி விட்டு பஸ்சிறங்கி
பாய்ந்தோடி வரும்
செல்ல மகளைப் பாருங்கள்...!
எவன் சொன்னது குயில்கள்
பேசுவதில்லையென்று...?
அவள் பகரும் ரைம்ஸ் கேளுங்கள்...!
வண்ணத்துப்பூச்சிக்கு
வாயில்லையா என்ன..?
அவள் கதை சொல்லச் சொல்ல
கேளுங்கள்...!
பாற்கடல் உறைபவன் மட்டுமா அழகு?
அவளுறங்க உச்சி மோருங்கள்...!!
கனல்வண்ணன் ஆடியது மட்டுமா
திருவிளையாடல்..?
அவள் பின்னோடி அன்னமூட்டிப்
பாருங்கள்...!!
"பொய்மையும் வாய்மையுடைத்த" என்று வள்ளுவன் பகன்றது எதை..?
அவள் அகவும் காணொணா கற்பனைக் கதை தானே..!!

இவ்வளவு நேரம் எங்கிருந்தாய் ...???






முன்னிரவுப் பொழுது ..
கண்கள் செருக ...
விளக்கணைக்கத் தோணுகையில் ...
கைகளைப்பற்றி , ஏதோவொரு உலகில்
சஞ்சரித்து ... பின்னர் நம்மிருவரின்
எண்ணங்களும் நேர்கோட்டில் நிற்க ...
கண்களும் ஒருகணம் நோக்கி
விலகிப் பின்
உள்ளுணர்வு உந்த ...காதல் அங்கே தொலைகிறது ..!!
அதைத் தேடுகிற பாவனையாய் ...சேர்ந்த கைகள் விலக மறுத்து ..
அட எங்கே போனதிந்தக்காதல்..?
புள் மேல் விடி பனியாய் ,
வியர்வைத்துளிகள் இரு தேகமெங்கும் எட்டிப் பார்க்க ...!!
இயக்கங்கள் அற்று ...தேகங்கள் இருபுறம் மெல்ல சோர்ந்து...
சாயும்போது ...வாஞ்சையாய் முன்நெற்றி முத்தத்தில் ,
காதல் மெல்ல பூக்கிறது ...மீண்டும்..!!
அட இவ்வளவு நேரம் எங்கிருந்தாய் ...???