உருமாறும் புழுவே
பட்டாம்பூச்சியாகிறது..!!
நீரலையில் மோதி மோதியே
சிறுபடகு
இலக்கை அடைகிறது..!!
உளியடி தன்னை
தன்னில் நிறைத்து
தயக்கமின்றி தம்முடல்
ஒப்புவிக்கும் பாறையே
சிலையாகிறது...!!
சுயத்தை இழந்து
துளைகளை ஏற்கும்
மூங்கிலே
புல்லாங்குழலாகிறது..!!
புற்றரவு தன்னைத்தான்
செதுக்கி செதுக்கியே
புதுத்தோல் பூணுகிறது..!!
அன்னைப்பறவை பறந்தெழுந்து
வருக என
அழைக்கையில் சிறகை விரித்து
கால்களின் பிடியை
முற்றிலும் விட்டுவிடும்
குஞ்சுகளே
வானை அறிகின்றன..!!
No comments:
Post a Comment