பிறைநிலவுத் தாரகை...
பேரழகு தேவதை...
பைந்தமிழ் பாடுபொருள்...
பண்பொழில் பூரணள்...
கண்விழி ஓரத்தில்
கனிவுதனை சூடியவள்..!
அக்கம்பக்கம் நோக்கிபின்
அளவுச்சேட்டை புரிவாள்...!!
எழில்மிகு மொழிதனில்
ஏற்றமிகு
மெய்யுரைப்பாள்..!!
எட்டி வந்து தோள் பற்றி
என்னுள்ளம் தான்
கரைப்பாள்..!!
மென்பஞ்சு குழல் கொண்டு
சூல்மேகம்
தான் படைத்தாள்..!!
தாயுள்ளம் கொண்டு
தந்தையையும் தாங்குவாள்..!!
தகப்பன் ஆளுமை கற்று
தன்சுற்றம் தானாளுவாள்..!!
கொடுத்து வைத்த உந்தன்
தமையன் உன்
பாற்கடல் மடியில்
தன்மெய் கொள்வான்..!!
No comments:
Post a Comment