அடவுகள் கட்டி
ஆடுதிங்கு,
மக்களால் உருவான அரசு..!!
அரவுகள் கூடி,
நஞ்சிங்கு
சமைத்து கருவான அரசு..!!
தன்மான உணர்வுகள்
கலந்து
நாட்டை ஆண்டது ரொம்ப பழசு..!!
உறவுகள் சேர்ந்து
ஆள்வது தானே புதுசு ..
இதில்
மத்தியம் என்ன ..மாநிலம் என்ன..!!
பதவி தான முக்கியம்
மத்ததெல்லாம்
சாகட்டுமே முக்கியும் ..!!
காசு தானே சத்தியம்
மிச்சதெல்லாம்
தேவையில்ல அவசியம் ..!!
(தாமிரபரணி )தண்ணி எடுக்கத்
தடையில்ல ..இனி
உன் இரத்தம்
உறிஞ்சாலும் குத்தமில்ல ..!!
ஓட்டுக்கு
கைய நீட்டி கேட்டுபுட்ட காசு
நீ படும்
பாட்டுக்கு
அவன்
போட்டுபுட்டான் சபாசு ...!!
No comments:
Post a Comment