விதை நெல்லு வாங்கிவச்சு
நேரம் பாத்து விதைச்சுப்போட்டு
வீதியில நிக்கிறோம்,
மழைத்தண்ணி இல்லாம ..!!
மாடி மேல மாடி கட்டி
தார் ரோடு ரெண்டு போட்டு
வயக்காட்டைப் பிரிச்ச
சனம், ஏசி கார்ல போகுதையா
மான ரோசம் இல்லாம ..!!
மழ வெள்ளத்துல நீங்க
பரிதவிச்சி நின்னீங்க...
பதைபதைச்சு வந்தோமே
பாவிமனம் கொள்ளாம ..!!
நஷ்ட ஈடு வேண்டி
நீதி கேட்டு நிக்கையில,
நாவறண்டு போனதயா...
மொட்ட வெயிலு
தாங்காம ..!!
அட ..வெயிலு தாகம்
நாங்க பார்த்ததுதான் ...
நெஞ்சு நொறுங்கி
போச்சுதய்யா ...
சர்க்காரு போலீஸ்காரன்
அடிக்கிறான்
வயசு வித்யாசம் பார்க்காம..!!
எடுத்துருவோம்
முழக்கயிற ...
தொங்கிடத்தான் நினெக்கிறோம் ...
பாசத்த உள்வச்சி எங்க சனம்,
எதிர்பாத்து நிக்குதய்யா
உங்களுக்கு
போய்விடுமா எட்டாம ...??!!
No comments:
Post a Comment