பெருத்த மூங்கில் காடொன்று
பற்றியெரிய சிறு
தீப்பொறி ஒன்று போதும் ..!!
தலைவணங்குகிறோம்
சிறுபொறியிங்கு
தீப்பந்தமென தனலாடுவதைக்கண்டு ..!!
ஐடி மட்டுமே அல்ல
வாழ்வின் ஆதாரம் ..
இயற்கையை ஆராதித்த ஒரு
தொல்குடி சமூகம்
மேலெழுந்து வரட்டும் ..!!
நம் பொறுமல்கள்
இடியோசை எனபல்கிப்பெருகி
வருணனின் இருண்ட
கதவுகளைத் தட்டட்டும் ..!!
தன்பெண்டு தன்பிள்ளை
என்றிருக்கும் ஒரு
தலைமுறையினைத்
தட்டி எழுப்பட்டும் ...!!
நம் ஆறுதலும் ஆதரவும்
நம் கவனமும் மரியாதையும்
விவசாயிக்கு எப்பவும் உண்டு
எனத்தெரிந்தாலே போதும் ..
அவன் தூக்கியெறிவான் தூக்குக் கயிறை ..!!
அதைச்செய்வோம் முதலில் ..!!
No comments:
Post a Comment