சிங்கப்படையே புறப்படு
புலிப்படையே பாய்ந்திடு
குள்ளநரிக்கூட்டத்தை வென்றிடு ..!!
கடாரத்தை கொண்டவன் நீ..
இமயத்தை கடந்தவன் நீ ...
ஆழ்கடலை ஆண்டவன் நீ ...!!
தன்னலமின்றி சேர்ந்ததிங்கு கூட்டம் ..
வெற்றியிங்கு வந்துன்னைச் சேரும் ..!!
வெறிகொண்ட வேங்கையென
தமிழினம் சீரும் ...!!
அங்கொன்று இங்கொன்று
என்றிருந்த சனம் இங்கு கூடி ...
சங்கே முழங்கு என ஆடுதம்மா பாடி ...!!
வெற்றி வாயில் இனி தூரமில்லை
இழக்க இனி ஏதுமில்லை ..!!
மெரினா அலைகள் உயர்ந்து தாவும் ..
தூய தமிழ் பாதம் ...இனி கழுவும் ..!!
தலைவன் ஒருவன் இங்கில்லை..
எனினும்,
தடம்புரள நேரவில்லை ..!!
மெல்ல தமிழ் இனி வெல்லட்டும் ..!!
உலகம் யாவும் மெச்சட்டும் ...!!
No comments:
Post a Comment