வருடமெல்லாம்
வறண்டிருந்தாலும் வாடியிருந்தாலும் ,
வருடக்கடைசி நாளில்,
நாளைய பொழுதாவது
நல்லபடியாக
விடியாதா ?, நாளும் நம்முழைப்பு
நன்மதிப்பு பெறாதா ..?,
நாம் கொண்ட ஆசைகள்
நிறைவேறாதா ?,
என்று சாமானியனின்
சந்தேக ஏக்கங்கள்
சடுதியில் மறைந்திட வா
புது வருடமே ..!!
எங்களுக்குள்ளே சாதி மத பேதங்களை
இனியாவது களைந்து,
ஏற்றத்தாழ்வு மறைந்து,
சமூக நீதி தா
புது வருடமே ..!!
பாதை பல புரட்டிச் சென்றாய் ..
காதை பல உணர்த்திச் சென்றாய் ..
ஆசை நூறு தந்து சென்றாய் ...
கடமை பல சுமத்திச் சென்றாய் ...2016
இனி வரும் காலம் வசந்தமாக இருக்கட்டும் ..!!
கடமையையும் பொறுப்பையும்
உணர்த்திச் செல்லட்டும் ..!!
வாழ்க புத்தாண்டு நம்பிக்கை ..!!
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!!!
No comments:
Post a Comment