கலைந்துலையும் மேகங்களைக்
அணுக்கத்தில்
கண்டிருக்கிறீர்களா..?
அந்தியில்
கூடடையும் பறவைகள்
தங்களுக்குள் பேசிக்கொள்வதென்ன ..?
மலர்விட்டெழும்
மென்மணம் எக்கணம்
வெளியேறுகிறது?
கரைமீளும் அலைத்துமி
மீள்வதெத்துளியில்..?
அனல் உண்டு அனல்
எழுகையில்
எந்தச் சருகு
எரிந்தமைந்தது ..?
சூழ்க்காற்று
சுற்றிஅலைகையில்
சொல்லத்துடிப்பதென்ன?
அறிவது அரிது அங்ஙனம்..!!
உணர்வது ஒன்றே பெருந்தவம்..!!
No comments:
Post a Comment