Wednesday, 25 January 2017

ஆதி உயிரின் ஆசி



கண்விழித்தோகையாக கன்னி நீ 
என்னருகில் 
இருக்கையில், மோகமிங்கு 
மேகக்கூட்டம் போல் 
செழிக்கும்..!!

முன்னெற்றி வியர்வை 
என் உதடு பட்டு இனிக்கும்..!!

கட்டில் பிடி உன் கை 
பட்டு நெறிபட 
காட்டுதீயொன்று நம் தேகமெங்கும் 
பற்றியேறும்..!!

நாணமிங்கு விடைபெற 
துடித்து, உன் மேனியெங்கும் 
ஒளிந்தோடத்துவங்கும்..!!

திருமேனி பற்றிய உன் 
பொன்னாடை, நழுவவா, வழுவவா 
என படபடக்கும்.
தாமரை மொட்டுக்கள் இரண்டும் 
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க 
விடுதலைக்கு ஏங்கி நிற்கும்..!!

அள்ளிக்கொண்டதும், தேக அணுக்கள் 
பாஸ்பரஸாய் பற்றிக்கொண்டு,
நீர்  பட்ட கனல் போல, இதயம் இரண்டும் 
காற்றுமிழும்.

ஆடைகள் அகன்று, நாணம் நகன்று 
அணுக்கம் பயின்று,
காமம் சூடி, காதல் வென்று, ஒருவருள் இருவரும் ,
இருவருள் ஒருவரும் ஒன்றுணர்ந்து 
எழுந்து அமைந்து நுகர்ந்து இழந்து பெற்று 
கொண்டு கொடுத்து 
அடைந்து அமைவதே ஆதி உயிரின் ஆசி..!!
வாழ்க காதல் ..!!

No comments:

Post a Comment