பின்னிரவு மழை
பெய்தோழிந்த வேளையில் ..
வந்துவிழும் உன் அலைபேசி
குறுஞ்செய்தி
சொல்லாமல் சொல்கிறது
தூவானம் இன்னும் விடவில்லையென..!!
இது போல் மழை விழும்
பல மாலைகளில்
நாம் கைகோர்த்து
காதல் வளர்த்திருந்த நனவுகள்
நினைவில் மீண்டெழுந்தன..!!
அன்றொருநாள்
நீ , நான் , மழைத்துளி மட்டுமேயான
முன்னிரவுப் பொழுது.
நம்முடன் நம்
காதலும் நனைய,
ஊற்றெடுத்தது புத்தம்புதிய காதல்.
கணந்தோறும் பெருக்கெடுத்து
நிதம் பெருகும்
உன்மத்தம் இது.
தேய்வழக்கின்றி சொல்லிங்கு
அமைய,
பொங்கிவரும் தேன்துணுக்கு கவிதை.
நின் பெயரின்றி
சொற்றொடர் அமைவதில்லை.
நம் இணையின்றி
இங்கு
காதல் அமைவதில்லை..!!
No comments:
Post a Comment