Friday, 15 April 2016

தந்தையுமானவள் ..!!



தனிப்பெருங்கருணையும் 
பெருங்கோபமும் 
ஒருங்கே கொண்டவள்..!!

சீரமைந்த சொற்களும் 
சீரெழுந்த நடையும், பெயரையொத்த 
பூரணமும் உடையனள்..!

கொற்றவை தம் குணம் போல் 
அறுகை ஆயுதம் அவள் ஏந்துவதுண்டு.
அடுத்த கணம் நூறுகை 
அருள் மொழிவதுண்டு..!! 

சிறுமதி அவளைத் 
தீண்டுவதில்லை. இடித்துரைப்போருக்கும் 
சிறுநகை  அன்றி பிற 
உதிர்ப்பதில்லை ..!!

நானின்றி குடும்பம் தனை 
அவள் புரக்கக்கூடும்..!!
அவளின்றி நான் 
உயிர் துறக்கக்கூடும்..!!

சென்மம் ஏழு செய்தேன் போல 
புண்ணியம் பல.
அதன் பலனே அம்மையை 
அடைந்தேன் வாழ்க்கைத்துணையாய்..!!

என் குலம் தழைக்கும் 
உன் நற்குணம் பல கொண்டு..!!
இறைஞ்சுகிறேன் இறைவனை 
ஆயுள் பல வேண்டி..
வாழவேண்டும் 
உன்னோடு...!!

No comments:

Post a Comment