பெருந்திரள் மேகங்கள்
திரளக் கனாகண்டேன் தோழி
பொன்திரை மெல்ல இறங்கிவர
மின்மினிகளின்
ஊர்வலம் கண்டேன்
மெல்வண்டுகளின் ரீங்காரம்
மெல்லத்தொடங்கக் கேட்டேன்
மேனியெங்கும் தொட்டுப்பரவும்
தென்திசை காற்று.
கூடணைய எண்ணும்
பெயரறியாப் பறவை உன் பெயர்
உச்சரித்துச் செல்லும்.
நிகர்நிகழ் காலத்து
மெய்ம்மை துரத்திடினும்
மெல்ல கணினி தன்னுயிர் அடங்கும்.
வாகையின் மென்தூவல் கடந்து
உன் அருகாமை எண்ணும்போது
நீ வாங்கி வரச்சொன்ன மல்லி மணக்கும்.
அலுவலகக்கூண்டினின்று அகன்று
நம் கூடணைய விழையும் வேளை
மெல்ல காதல் பூ விரியும்.
ஆம்...
கூடலின்றி அமையாதுலகு ..!!