
நீயின்றி நான் கடக்கும்
சோலையில் உணர்ந்தேன்
பாலையின் வெப்பத்தை…!!
உனதுமழைத்தாகம் தெரிந்தோ என்னவோ,
நாமில்லா சமயங்களில்
பெய்வதில்லை மழை …!!
உனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை
தொட்டமுதல் மழைத்துளிஎதுவென…… ?!!!
நீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்
எனக்குள் பிரமை… !!!
காத்திருப்புகளும்,
சில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம்...
உனக்கான ...பூக்கள் வாங்கிய
கடைக்காரன் ஏளனமாய்ப்
பார்க்கிறான் இன்று……
உனது மறுதலிப்பு
அவனுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை…! எனக்கான
உன் சிலநிமிட காத்திருப்புகள்
என்னுள் ஏற்படுத்திய
அதிர்வுகள் பல…! இன்று நீ
எனக்காகக் காத்திருப்பதில்லை…!
இருந்தாலும் ,
நான்தவறவிட்ட
சில நிமிடங்கள் தான்,
எனக்குத் தரப்பட்ட அவகாசங்கள்
என்பதை நான்உணரவில்லை……!
நாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….
நமக்கான ,
நமது காதலைப்புரிந்து
கொள்ள….?!!!
--பிரநேசம்.
மிக அருமை
ReplyDelete