Wednesday, 24 February 2010

ஆதியில் ஆப்பிள்...


காது மடல் நுனி...

கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !

கால்கள் பின்னி

ஊர்ந்த கைகளுக்கிடையே

சிக்கித்தவித்தது வெட்கம்… !

படர்கையில் பாதிதேகம்

நிலைக்கண்ணாடியில்…,

தோன்றி விலக,

மறைந்து சிரித்தது வெட்கம்…!

பின்னிரவுப்பறவையொன்று

ஜன்னல் வழிபார்த்து

சீட்டியடித்தது….. !


மயக்கம் பாதி, தயக்கம் மீதி…

முடிவில் முதலாவது ஜெயிக்க,

தயக்கமும், வெட்கமும்…

கட்டில் நுனியில்… !

தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து,

பின்..ஒவ்வொன்றாய் பிரிய…

வியர்வைத்துளியில்,

கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. !

புரியாத புதிராய்புதிதாய்த்

தொடங்கத் தொடங்க,புரியாதவை

புலப்படலாயின…!

இருபது வருடங்களாய்

பூட்டிவைத்தபொக்கிஷங்கள்

கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,


மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,

உண்டாயின…. !

மூச்சூக்காற்றும் வெப்பமாக,

வியர்வையில் தேகம் தெப்பமாக…!

களைத்து விலகும் போது


காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !

வாழ்க…… !

ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. !

No comments:

Post a Comment