நீ எனக்கானவள்இல்லை
எனத்தெரிந்த பின் தான்
உன்மேலான காதல்
மேன்மேலும்உயிர்த்தெழுகிறது…..!!
உனது விடலைத்தன காதலின்
ஆழம் புரிந்த பின்தான்
எனதான காதல்
தன்னைத் தானே சோதித்தறிகிறது. …..!!
உனக்கே தெரியும் நமது
சம்பாஷணைகளின் தொடக்கங்களும் முடிவுகளும்
வெவ்வேறு திசைகளிலேயே
பயணித்திருக்கின்றன. …..!!
எனக்குத் தோன்றுவதுண்டு ,
சில நேரம் …
நமது உரையாடல்கள்
முடிவேயில்லாமல் நீண்டு விட்டாலென்ன… …..!!
மிக அருமை
ReplyDelete