
காது மடல் நுனி...
கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,
கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !
கால்கள் பின்னி
ஊர்ந்த கைகளுக்கிடையே
சிக்கித்தவித்தது வெட்கம்… !
படர்கையில் பாதிதேகம்
நிலைக்கண்ணாடியில்…,
தோன்றி விலக,
மறைந்து சிரித்தது வெட்கம்…!
பின்னிரவுப்பறவையொன்று
ஜன்னல் வழிபார்த்து
சீட்டியடித்தது….. !
மயக்கம் பாதி, தயக்கம் மீதி…
முடிவில் முதலாவது ஜெயிக்க,
தயக்கமும், வெட்கமும்…
கட்டில் நுனியில்… !
தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து,
பின்..ஒவ்வொன்றாய் பிரிய…
வியர்வைத்துளியில்,
கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. !
புரியாத புதிராய்புதிதாய்த்
தொடங்கத் தொடங்க,புரியாதவை
புலப்படலாயின…!
இருபது வருடங்களாய்
பூட்டிவைத்தபொக்கிஷங்கள்
கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,
மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,
உண்டாயின…. !
மூச்சூக்காற்றும் வெப்பமாக,
வியர்வையில் தேகம் தெப்பமாக…!
களைத்து விலகும் போது
காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !
வாழ்க…… !
ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. !
