Monday, 8 March 2010

௦ஓட்டுக்குப் பணம்...!!

எச்சிலுடை வீச்சம்..
நாள்பட்ட சாதம்..
முதிர் கன்னி விபச்சாரம்..
முறையில்லா காமம்..

மேஜைக்கடி பரிதானம்..
பன்றிக் கொட்டில் வாசம்..
பலநாள் கோவணம்..
குஷ்டரோகி மலம்..

இவையெல்லாவற்றினும கேவலம்....
௦ஓட்டுக்குப் பணம்...!!

Tuesday, 2 March 2010

பெயரிடாத்தமிழ்


பின்னொரு நாளில்

பிறக்கப் போகும்

குழந்தைக்குப்பெயரிட்டேன் “யாழிசை” என்று…

பெற்றவள் சொன்னாள்…பெண்தானென்று…

பெறப்போகிறவள் சொல்கிறாள் ஆண் என்று…


பால் என்னவென்று அறிய

அரசாங்கத் தடை இருப்பினும்

பால் வாடை

நுகரபெறப்போகிறவன் தவமிருக்கிறேன்….!!

பால் எதுவாயிருப்பினும்,

பால் வாசமும், எச்சிலுடை வீச்சமும்,

என் தமிழ் பெருமையைச் சொல்லும்…!!

எந்நாட்டின் கீழ் இருந்தாலும்,

தெள்ளு தமிழ் பேசி என் வாரிசு

என் தமிழ் சொல்லும்…!!

- பிரநேசம்